பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யெளவனம் மாறுகிற வரை: பிறகு வருகிறது யோசனை, கரும வெற்றிகளில் பிறத்த களிப்பு, உற்பத்தி செய்வதிலிருக்கும் உள்ள நெகிழ்ச்சி.

அரை குறையற்றதின் அழகு, நிறைவின் நிம்மதி, . மண்ணின் மற்றெல்லா மகிழ்ச்சிகள்

மாலே வரை!

இருண்டதும்,

மனிதன் மறுபடியும் பிரயாணமாகிருன்

தின் வழியே--

அமைதியாக -

வாழ்வின் இனிமைகளை ரசித்து மகிழ வேண்டும் என்று கருதி, இன்பங்களே வியந்து போற்றுவதில் கு. ப. ரா ஆர்வம் கொண்டிருந்தார் என்பதை அவர் எழுத்துக்கள் கூறும், அவரது வாழ்க்கைத் தத்துவத்தைப் பிரகடனப்படுத்துவது போல் அமைந்துள்ளது நண்பனுக்கு என்ற கவிதை.

ஓயாமல் எண்ணியும் பேசியும், சளைத்துப் போய் விட்டோம், அல்லவா? வார்த்தையை வைத்து வாதாடி வீண் வித்தியாசம் கொண்டோம். போதும்!

மாயையும் தத்துவமும் என்ன

என்று தெரியவே வேண்டாம்; கண்கண்ட சுகத்தைக் கடைந்து உண்போம், இனிமேல், வா!

இவ் வாழ்க்கை நதி வரண்டு

மணலாகும் மரணம் வரை அதன் கரை புரளும் வெற்றியை

ஒப்புக் கொள்வோம், அதனுலென்ன? உயிரின் இன்ப ஊழியத்தில் -

அடிமைகளாவோம், பாதகமில்லை! ஆத்மா, பரமாத்மா-இந்தப் பேச்சு

யுகம் யுகமாக, காது துளைத்துப் போச்சு!