பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

பற்பல நாதங்கள் குழம்பினும் என்! ம்ேலோங்கி ஒலிக்கும் மனிதக் குரல் இந்தியா ரேஸ். புல் ரிசல்ட், வேனுமா?

கை சைகை கண்டால் குதித்தே வருவான் ஒடும் டிராமிலே தொத்திப் பாய்வான்: டிக்கெட் டில்லாமலே டிமிக்கி கொடுப்பான்!

சில்லரை, சில்லரை என்றே ஒசிப் பயணம் ஒன்றிரண்டு செய்வான் அவன் வாய்ப் பல்லவி

இந்தியா ரேஸ்: இவ்வாறு வர்ணித்து, பந்தயப் புத்தகங்கள் விற்பனை செய்யும் பையன்களின் பரிதாப நிலைமையை விளக்குவது இந்தக் கவிதை, ஏனய கவிதைகளும், வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டவர்களின் அவலத்தைச் சித்தரிப்பனவே.

நான் நவசக்தி யில் நான்கு மாதங்கள் தான் வேலே பார்த்தேன். 1944 ஏப்ரவில், திருச்சி ஜில்லா துறையூரில் வளர்ந்து கொண்டிருந்த கிராம ஊழியன் சேவைக்காகப் போய் விட்டேன், அதன் பிறகு, கே. ராமநாதன், 1944 ம்ே மாதம், புத்த பக்தி முதலிய வசன கவிதை'களைத் தொகுத்து சிறு புத்தகமாக வெளியிட்டார். தமிழில் வெளிவந்த முதல் வசன கவிதைப் புத்தகம் இதுவே ஆகும். ஏழு வசன கவிதை கள் கொண்டது. 31 பக்கங்கள்,

7. பாரதி அடிச்சுவட்டில்

பாரதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட வசன கவிதை

முயற்சிகள் பாரதி காட்டிய வழியில் செல்லவில்லை; பாரதி யின் காட்சிகள் போல் அவை அமையவில்லை என்று