பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

நா. வானமாமலை



பெட்டையே முன்னென்போரும், இல்லை
வரிசையே நன்றென்போரும், ஏறுவோரும்
தேர்ந்ததே தேரினல்லால்
யாவரே தெரியக் கண்டார்?
குழுமினர் துவன்றி முயல,
கால்மிதிப்பன கைபிடிப்பன
தோள் இடிப்பன மயிர் இழுப்பன
பொய்யோ வெனும் இடையோடு
ஐயோவெனும் அரும்பினர்
கிடைத்தாரென நெறிப்பன
பாடியல் யானைப் பத்தியங் கடையின்
கூரியல் சாதனை நெருக்கி ஆய்வன
எல்லாம் வண்டியில் அடுத்த கணம்
கலைத்த மழையுள மறைந்த பூவுள
தாங்கிய செங்கை தலைக்கண் மேலுள
ஒலித்த வளையுள ஓய்ந்த விரலுள
சரிந்த கலைப்பால் தெரிந்த பூவுள
பாலூட்டக் கிடைத்தனவோ? பால்
உணர்ச்சி பூட்டிடவே
ஆழக் கழுத்தெடுத்து
நீளம் மிகக்குறைந்து
சேரப் பிடித்த சோளி
நின்று கவனித்து சோர்வு
நடை பின்னச் செய்யும்

இக்காட்சிகளால் பிரவகித்த தாரையோடு கவிஞர் வீட்டிற்கு வருகிறார். காம உளைச்சல்கள் தாரையைத் துரிதமாக்குகின்றன. வீட்டில் தனியாக இருக்கும்போது கண நினைவுகளாகத் தாரை பாய்ந்தோடுகிறது:

வீட்டிற்கு வந்த உடன்
இலக்கியத்தில் தஞ்சம்புக
அருப்பேந்திய கலசத் துணைய முதேந்திய மதமா
மருப்பேந்திய கனலா
முலை வஞ்சி காவின் கீழ்
போதர கடாரப் புல்லி முயங்குவேந்
முகடு காப்பியாத்து விட்டாங்கு
சேர்ந்த மார்பில் கனதனம் யிரண்டும் தைத்தே
அப்புறம் உருவிற்றென்றே
அங்கையால் தடவிப் பார்த்தான்