பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெள்ளி முளைத்தாற் போல்

தமிழிற்கே விமோசனம் கிடையாது என்று தினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வெள்ளி முளைத்தாற்போல் சிறுகதை எழுதுகிறவர்கள் தோன்றி இருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கள், கற்பனைகள் எல்லாம் தமிழுக்குப் புதியவை.

குருடனின் நிலை!

இருள்! இருள்! பற்றுக் கோலை யாரோ தட்டிப் பிடுங்கிக் கொண்ட குருடனின் நிலை.

இயற்கையின் செழிப்பு

காலத் தேவனின் தங்கைகள் போன்ற பாறை இயற்கையின் செழிப்பான கானகம் என்ற அந்தப் புரத்திலே மறைந்து கிடந்தன.

மனோ தர்மம்

சிறு கதையின் ரூபம் கதை எழுதுபவனின் மனோதர்மத்தைப் பொறுத்தது.

காலம் ஓடுமா?

நான் ஓடினால், காலம் ஒடும் நான் அற்றால், காலம் அற்றுப் போகும்.

60