பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105|முருகுசுந்தரம் கள் நீதி மன்றம் சென்று விட்டுக் குயில் அலுவலகம் செல்லுங்கள்’ என்று உடன் இருந்தவர்கள்கூறினர்கள். கவிஞர், அவர்கள் கூறியதை ஏற்றுக் கொள்ளவில்லை, தாமே என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ருர், காயத்துக்குத் தையல் போட்டு மருந்திட்டுக் கட்டி என்னை வீட்டில் கொண்டுவந்து விட்டபிறகே அவர் நீதி மன்றம் சென்ருள். காயம் ஆறி நீண்டநாள் ஆன பிறகும்கூடஎன்னை எப்போது பார்த்தாலும் அடிபட்ட கை விரலைக்காட்டச் சொல்லிப் ப்ார்ப்பார். அவர் பரிவும், அன்பும் என்னை மெய்சிலிர்க்கச் செய்யும். எங்கள் தந்தையார் இறந்தபோது, கவிஞர் புதுச்சேரி யில் இல்லை. திரைப்படத்துக்குப் ப்ரிடல் எழுதுவதற் காகச் சென்னை சென்றிருந்தார். எங்கள் தந்தையின் இறப்புச் செய்தியைப் பாரி நிலைம் உட்ரிம்ையாளரான திருவாளர் செல்லப்ப ரெட்டியாருக்குத் தந்தி மூலம் தெரியப்படுத்திைேம். அவர் கண்ணதாசனுக்குத்ெ வித்தார். கவிஞர் கண்ணத்ாசன்,எங்கோ ஒருஸ்டுடியோ வில் இருந்த பர்வேந்தன்ரத் தொலைiேசி மூலம் தொடர்பு கொண்டு சம்பந்தியின் இறப்பைத் தெரிவித் தார். உடனே கண்ணதாசனின் காரை எடுத்துக் கொண்டு கவிஞர் சென்னையிலிருந்து புறப்பட்டு விட்டார். நாங்கள் கொடுத்த கம்பிச் செய்தி பாவேந்தருக்குச் சென்னையில் கிடைத்திருக்காது என்று நாங்கள் நினைத் தோம். எனவே எங்கள் தந்தையாரின் சடலத்துக்கு எரியூட்டுவதற்காகச் சுடுகாட்டுக்குப் புறப்பட்டோம். சடலத்தைச் சிதையில் வைத்து எங்களுடைய மூத்த அண்ணுர் தீவைக்கத் தொடங்கும்போது யாரும் எதிர் பாராத வண்ணம் பாவேந்தர் அங்குக் காரில் வந்து இறங்கினர். மேலே அடுக்கப்பட்டிருந்த எரு மூட்டைகளை நீக்கச் சொல்லிச் சம்பந்தியாரின் முகத்தைக் கடைசி முறையா கப் பார்த்தார். அவர் கண்களில் நீரூற்றுப் பெருகி ஓடியது என்றும்நிலை குலையாத ப்ாவேந்தர் அன்று