இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாலாவது
75
ஒட்டும் உழவனும் புகையிலைக்கு முன்னே சமமாகி விட்டார்கள்!
மன்னன் என்ன? வாக்குசாதுர்யம் உள்ள புலவர்களானலும் அப்படித்தான் செய்வார்கள். சொற்களைச் சமத்காரமாகப் பேசித் தம் புலமையை மிடுக்குடன் காட்டுபவராக இருந்தாலும், புகையிலை தேவையாகும்போது இன்னர் இனியார் என்று பாராமல் யாரிடமும் கைநீட்டிப் பல்லைக் காட்டுவாராம். புகையிலை அப்படிச் செய்துவிடுமாம். புகையிலை விடுதூது அந்தக் காட்சியைக் காட்டுகிறது.
- சொல் காட்டும் நல்ல
- துடிகாரர் ஆரையும் போய்ப்
- பல் காட்ட வைத்த
- பழிகாரா!
‘பழிகாரா!’ என்றது செல்லமாகத் தட்டிக் கொடுத்து உணர்ச்சியோடு சொல்லும் வார்த்தை. ‘அட போக்கிரி’ என்று நம்முடைய குழந்தையைத் தட்டிக் கொடுத்துச் சொல்கிறோம் அல்லவா?