பக்கம்:புது வெளிச்சம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'மாடுண்டு கன்றுண்டு மக்களுண்டென்று மகிழ்ந்த தெல்லாம்
கேடுண் டெனக்கேட்டு வந்துவிட்டோம் இனிக்கேள் மனமே!
ஒடுண்டு கந்தையுண்டு உள்ளே எழுத்தோ ஐந்து முண்டு
தோடுண்ட கண்ட னடியார் நமக்குத் துணையு முண்டே!

என்ற பாட்டுப் பாடக்கூடிய நாட்டில் மழையேன் பெய்ய வேண்டும். பயிர் விளைய ஏழைமக்கள் ஏன் பாடுபடவேண்டும்! ஆட்சி எதற்கு? அதிகாரம் எதற்கு? ஒடு எடுத்துக்கொண்டு போக வேண்டியது தானே.

பராதீனத்தின் பயன் இதுதான்? குருடர்கள் யானையைத் தொட்டுப்பார்த்து அபிப்பிராயம் கூறியதற்கும் மக்கள் வானிலும், மண்ணில் கோவில்களிலும் உருவங்களை வைத்துக் கொண்டு, ( சுயாதீனம்’ என்ற சொல்லின் பொருளை யறியாது? புத்தி கெட்டவர்களாக வாழும் நாட்டில் சுதந்திரம் தங்கியிருக்க இடமே கிடையாது.

பராதீனம் என்றால் அடிமை என்றுபொருள். இதுவேண்டாதது, தேவையற்றது எனவே உரத்துக் கூறுக! என் அருமை நண்பனே. "நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்படோம் என்று நம்பி முழக்கமிடுக! ஆமாம், மேலே கூறிய ஐந்து கற்பனைத் தெய்வங்கள் உட்படத்தான் முழக்கமிடுக!



தர்மத்தின் புனர்ஜென்மம்தான், பாரத தேசத்தின் விடுதலை கவிஞன் இல்லாத ஒரு தேசம். கண்ணில்லாத தேசம்தான்

- ஸ்ரீ கண்டய்யா

சுகத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்றால் புத்தகங்களை முதலில் தேடிக்கொள்.

- வி. ஸ்டாரிட்

82 <

கவிஞர் வெள்ளியங்காட்டான்