பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம் கண்டோம் ! 19

10.

15.

20.

25.

கடுஞ்சின விறல்வேள் களிறு ஊர்ந் தாங்குச் செவ்வாய் ஏ.கம் விலங்குநர் அறுப்ப அருநிறம் திறந்த புண்உமிழ் குருதியின் மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து மனுலக் கலவை போல அரண்கொன்று முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கல் பலர்மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் வென்று எறி முழங்குபண செய்த வெல்போர் நார்அரி நறவின் ஆர மார்பிற் போர்.அடு தானேச் சேர லாக! மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும் வலன்உயர் மருப்பிற் பழிதீர் யானைப் பொலன் அணி எருத்தம்

மேல்கொண்டு பொலிந்தநின் பலர்புகழ் செல்வம் இனிது கண் டிகுமே, கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் தென்னங் குமரியொடு ஆயிடை மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே,

0 சேரலாத, வேள் களிறு ஊர்ந்தாங்கு, மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்து, யானே எருத்தம் மேல் கொண்டு பொலிந்த நின் செல்வம் கண்டிகும் என்று இணைத்துப் பொருள் கொள்ளவேண்டும். சேரனுக்கு முருகக் கடவுளே உவமை கூற வந்த புலவர், கடலிற் சென்று கடிமரம் தடிதலும் களிறுTர்தலும் ஆகிய பொதுத் தொழில்களே இருவர்க்கும் சார்த்தி உரைத்தனர்' என்று ஐயரவர்கள் எழுதியிருக்கிருர்கள். 0