பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துறைப் பரதவன் 5?

தார்கள். இப்படியாகக் கலைப் பண்பு நிறைந்த அவர் களுடைய வாழ்க்கை பேரெழில் வாழ்க்கையாகச் சிறப்புற்று விளங்கியது. -

நாட்டு மக்களின் செல்வ வளத்தைப்பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இம்மையிலே சொர்க்க போகத்தைப் பெறுகிறவர்கள் அவர்கள். அறுசுவை உணவை உண்டும், நுகர்ச்சிக்குரிய பொருள்களை இனிதாக நுகர்ந்தும் வாழ்ந்தார்கள். தாமே நுகரும் சிறுமை அவர்களிடம் இல்லை. விரும்பி வருகின்ற சுற்றத்தாரோடு விருந்துண்டும் பிற இன்பங்களை நுகரச் செய்து நுகர்ந்தும் தங்கள் செல்வத்தைப் பயன்படுத்தினர்கள். தாமே நுகரும் இன்பத்தினும் சுற்றத்தாரோடு சேர்ந்து நுகரும் இன்பம் பன்மடங்கு மிகுதியானது. அதுவே வழக்கமாய்ப் போன அவர் களுக்குச் சுற்றத்தாரின்றி நுகரும் இன்பம் இன்ப மாகவே தோற்றுவதில்லை. -

சுற்றத்தோடு உண்டு இனிது நுகரும் கூட்டத் தினரைப் புலவர் கண்டு மகிழ்ந்தார். இனிய புனலை யுடைய ஆற்றங் கரைகளில் அவர்கள் ஆடி மகிழ்ந்த தைப் பார்த்தார். சேரநாட்டுக்கு உரிய காஞ்சி என்ற ஆற்றையும் கண்டார். அதன் துறைகள் மக்கள் பலர் நீராடும் பெருந் துறைகளாக இருந்தன.

வாழ்த்து இப்படிப் பல வகையில் அறிந்த செய்திகளை யெல்லாம் நெஞ்சமாகிய கொள் கலத்தில் சேமித்து