பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பேதைம்ை இந்த உலகிலோ அல்லது அடுத்த உலகிலோ, எந்தத் துன்பங்கள் இருந்தாலும், அவைகள் அனைத்திற்கும் வேராக உள்ளது பேதைமை. அவை (அத்துன்பங்கள் விருப்பம் அல்லது ஆசை காரணமாக எழுபவை." விழித்திருப்பவனுக்கு இரவு கெடிதாகும்; களைத் திருப்பவனுக்கு வழி நெடுந்துாரமாகும்; கல்லறத்தை அறியாத மூடருக்கு (ஜனன-மரணமாகிய) சம்சாரத் தொடர் எல்லையற்தாகும்.' பேதை தன் மடமையை உனர்ந்தால், அந்த அளவுக்கு அவன் அறிவுள்ளவன்; தன்னைப் பண்டித னாக எண்ணிக்கொள்ளும் பேதை முழு முடனே யாவான்." பாவம் பழுத்துப் பயனளிக்காத வரையில் மூட ன் அதைத் தேன் என்று விரும்புகிறான்; ஆனால் அது பழுத்துப் பயனளிக்கையில், அவன் (ஆறாத் துயரை அடைகிறான்." o மலங்களில் எல்லாம் பெரியதோர் மலம் உண்டுஅறியாமையே முதன்மையான மலம். பிக்குகளே! அந்த மலத்தையும் ஒழித்துவிட்டு, மாசற்றவராக விளங்குவிர்!"