பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. களியாட்டம் புலன்களை அடக்காமல், உணவில் கிதான மில்லாமல், மடிமையில் ஆழ்ந்து, வீரியம் குறைந்து, இன்பங்களுக்காகவே வாழ்ந்து வருவோனை வலியற்ற மரத்தைக் காற்று வீழ்த்துவது போல, மாரன் முறியடிக்கிறான்." இந்த உலகம் எப்பொழுதும் எரிந்து கொண்டே யிருக்கையில், இங்கே என்ன சிரிப்பு: இங்கே என்ன களியாட்டம்? இருளால் மூடப்பட்டிருக்கும் நீங்கள் ஏன் ஒளியைத் தேடுவதில்லை?!

சரற் காலத்தில் காற்றில் பறக்கும் சுரைக்கொடி போன்ற இந்த வெள்ளை எலும்புகளைப் பார்ப்ப வனுக்கு என்ன இன்பம் இருக்கிறது!" 挚 அஸ்திகளைக் கொண்டு ஒரு மாளிகை கட்டி, ஊனும் உதிரமும் கலந்த சாந்து பூசப்பட்டிருக்கிறது; இதிலே வசிக்கின்றன. முதுமையும், மரணமும், கர்வ மும், கபடமும்." மலத்தைத் தின்று வளரும் பெரும் பன்றியைப் போல், ஒருவன் உடல் கொழுத்துப் பெருந்தீனியில் பற்றுள்ளவனாகி, நீங்காத சோம்பலிலும் கித்திரை யிலும் ஆழ்ந்து, படுக்கையிலே புரண்டு கொண்டிருந் தால், அந்த அறிவிலி திரும்பத் திரும்பப் பிறவியெடுக்க நேரிடுகிறது. 臀