பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கேதாரி' கதை எழுத வேண்டும் என்று ஆரம்பிக்கும் அநேக எழுத்தாளர்களுக்கு என்ன பெயரில் அதை எழுதி அனுப்பு வது என்ற பிரச்னை வந்து விடும். சிலர் என்னிடமே வந்து ஆலோசனையும் கேட்டிருக்கிருர்கள். புனை பெயர் மோகம் கதை எழுதுவதைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. - . . . . .”

  • அப்படி மோகமில்லாத மனிதராக நீர் இருப்பது தானே? ஏன் இந்தப் புனை பெயர்?...' என்று உங்களில் யாரோ ஒருவர் முனு முணுப்பது எனக்குக் கேட்காமல் இல்லை. -

"அதுலேதான் இருக்குதுகதை' என்ருர் சமீபத்தில் இருந்த ஒரு நண்பர், ஏதோ ஒரு கட்டுரையைப் படித்து விட்டு. ". - எதுலே?” என்றேன் நான். நண்பர் விளக்க ஆரம்பித்து விட்டார். "ஒவ்வொரு எழுத்தாளனும் தன் எழுத்தைப் பலர் படிக்க வேண்டும் என்று ஆசைப் படுகிருன். அதிலும் தனக்கு வேண்டியவர்கள் படித்துப் பாராட்ட வேண்டும் என்பது அவனுடைய பெரு விருப்பம். ஆனால் இந்தச் சுற்று வட்டார மனிதர்கள் இருக்கிருர்களே, அவர்களுக்கு ւ4-2