பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கான் முதல் கதை § 7 போட்டிக்கு வந்த முன்னுாறு கதைகளில், மூன்றைத் தேர்ந்தெடுத்தார்கள் பஞ்சாயத்தார். ராவி எழுதிய “ஊமைச்சியின் காதல்’ என்ற கதைக்கு முதல் பரிசும், "மலரும் மணமும்' என்ற என் கதைக்கும், ரா. பூரீ. ஆர்கண்டன் எழுதிய ஒரு கதைக்கும் இரண்டாவது பரிசும் கொடுக்கத் தீர்மானித்தார்கள். போட்டி முடிவு வெளி யான விகட னில் மலரும் மனமும் என்ற கதையை எழுதியவர் பெயர், விலாசங்களை அறிவிக்கவும்' என்று கேட்டிருந்தார்கள். அனுப்பினேன். அதுதான் மெய்யாக என் முதல் கதை. அந்தக் கதை தான், “என்னுல் எழுத முடியும், நான் எழுதவேண்டும்' என்ற எண்ணத்தை எனக்கு ஊட்டியது. இருபத்து இரண்டு ஆண்டுகளாகின்றன. இன்னும் ந - ன் ஆண்டு தோறும் ஆயுத பூசையன்று பேளுவைத்தான் மனைவில் வைத்து மலர் துரவிப் பூசித்துக் கொண்டிக்கின்றேன்.