பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் இந்தப் புனைபெயர் : 1 ஜெகசிற்பியன் புனை பெயரில் அதிக நம்பிக்கை கொள்ளாத நண்பர் பூவை எஸ். ஆறுமுகம், புனே பெயர் என்ற ஆமை ஒட் டுக்குள் புகுந்து முடங்கி இலக்கிய உலகில் ஏதோ ஒரு தினுசாக நகர்ந்து கொண்டு கிடக்கும் என்னைப் போன்ற அப்பாவிகளை இப்படிச் சந்தி சிரிக்க வைக்க நினைத்தது ஏன் என்று எனக்குப் புரியவில்லை! காரணம் எதுவாயிருந் தாலும், அந்த ஆமை ஒட்டுக்குள் நான் புகுந்து ஆண்டுகள் பதினறு ஆகிவிட்டதால், என் தலையை சற்றே நீட்டிக் காட்ட இப்போது தைரியம் பிறந்திருக்கிறது. - - என்னைப் படைக்கக் கடவுள் எவ்வளவு காலம் யோசனை செய்தாரோ எனக்குத் தெரியாது: என்னை உருவாக்க என் பெற்ருேர் எத்தனை இரவுகள் மந்திராலோசனை செய்தார் களோ அதுவும் தெரியாது; நான் பிறந்த எட்டாம் நாள், மாயவரம் சுந்தரம் டாக்கீஸ் அருகாமையிலுள்ள நெடி துயர்ந்த மாதா கோயிலுக்கு என்னைத் தூக்கிக் கொண்டு போய் ஞானஸ்நானத் தொட்டிலில் கிடத்தும்போது பாதிரியாரிடம் எனக்கு என்ன பெயர் சூட்டியிருப்பதாகச் சொல்லலாம் என்று எனது பெற்ருேரும் உறவினர்களும்