பக்கம்:புராண மதங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண - மதங்கள். மணி ஒலித்தது! கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கருப்பண்ணசாமி அலறியபடி உள்ளே ஓடலா னார், ஒளிந்துகொள்ள இடம் தேடினார். 'களுக்'கென ஒரு சிரிப்பொலி கேட்டது. கருப் பண்ணசாமி, கோபம் கொண்டு, வேதனைப்படுகி றேன் நான் - இந்த வேளையில் கேலி வேறு செய் கிறாயா?" என்று கேட்டார், சிரித்தபடி தன் எதிரே வந்த தேவியைப் பார்த்து. "கருப்பண்ணா - என்ன கலக்கம் ! ஏன் ஓடுகிறாய், ஒளிக்கிறாய்" - என்று தேவி கேட்க, கருப்பண்ணசாமி "காதிலே விழவில்லையா. மணிச சப்தம் என்று கேட்டார் . . "விழுந்தது - அது கேட்டு அச்சம் ஏன் வரவேண் டும் - ஆச்சரியமாக இருக்கிறதே என்று தேவி கேட்டார். "உனக்கு ஒன்றும் புரிவதில்லை. யாரோ பக்தர்க ளல்லவா வருகிறார்கள் .....! என்று பயத்துடன் பேசினார் கருப்பண்ணர். "பைத்தியமே! பக்தர் வருகிறார் என்றால் பயம் ஏன் வரவேண்டும்? உன்னைத்தொழ, சூடம் கொளுத்த, சோட சோபசாரம் செய்ய, படையல் போட வருகிறார் கள் பக்தர்கள். இதற்கு ஏன் பயப்பட வேண்டும் ....... ஓஹோ! இவ்வளவு பூஜையையும் ஏற்றுக்கொண்டு எங்கள் கஷ்டத்தைப் போக்காமல் இருக்கிறாயே கருப் பண்ணசாமி! - என்று அந்த பக்தர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்ற பயமா? என்றார் தேவி. கருப்பண்ணர், "போதும் தேவி உன் தொல்லை. வரம் தந்து அவர்களின் குறையைப் போக்கவில்லை என்பதற்காக என்மீது சீறுவார்கள் என்ற பயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/23&oldid=1033262" இலிருந்து மீள்விக்கப்பட்டது