பக்கம்:புராண மதங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



H - N 28 புராண - மருங்கள் கள் இந்த வருஷம் உற்சவத்தை நடத்தாமல் இருந்து விடுவார்களோ என்று எனக்கு இலேசாகப் பயம் அவர் கள் உற்சவத்தை வழக்கப்படி நடத்த முன்வரவே நான் மகிழ்ச்சி அடைந்தேன் - எவ்வளவு பிரச்சாரம் நடை பெற்றாலும் நமது செல்வாக்கும் போய்விடவில்லை. என்று எண்ணிப் பூரித்துப் போனேன். வருஷா வரு ஷம வைகாசி மாதம் உற்சவம் நடத்துவார்கள் எனக்கு கருப்ப உடையார் தலைவர், உற்சவம் நடத்திய பக்தர் குழாத்துக்கு - வழக்கப்படி ஊர்வலமாக என்னை அழைத் துச் சென்றார்கள். பயல்களே ! பகுத்தறிவு - சுயமரி தையா என்று கருதிக்கொண் டிருக்கிறீர்களே - பாருங் களடா , பக்தர்கள் எனக்கு உற்சவம் கொண்டாடு வதை " என்று கூறிட எண்ணினேன் - ஆனால் அந்தப் பயல்கள் ஒருவன் கூட காணோம் - எங்காவது 'மஹா நாடு' போட்டிருப்பான்கள் போலிருக்கு. சந்தோஷ மாகப் பவனி வந்தேன். எப்போதும் போல என்னைக் கொண்டு போய் மண்டபத்தில் கொலுவிருக்கச் செய் தார்கள். பக்தாகள் என்னை வந்து தரிசிக்க அதுதானே நல்ல ஏற்பாடு . நானும் மண்டபத்தில் கெம்பீரமாக வீற்றிருந்தேன்.) பக்தகோடிகள் இரண்டு 'கோஷ்டி யாகி இருந் தனர் என்று சொன்னேனல்லவா- உற்சவம் செய்தது ஒருகோஷ்டி , - கருப்ப உடையார் கோஷ்டி. மற்றொரு கோஷ்டி பிச்ச உடையார் நடத்தி வந்தார் - அந்தக் 'கோஷ்டி'யும் எள் பக்கர்கள் தான். அந்த இரண்டு கோஷ்டிக்கும் தான் பகை. இரனைடு கோஷ்டிக்கும் என்னிடம் பகை ஏற்படக் காரணமே கிரையாது. மண்டபத்தில் இருந்த என்னை மீண்டும் கோயி லுக்கு அழைத்துப்போகக் கூடிற்று கருப்ப பக்தர் கோஷ்டி. "தூங்காதே! எடுக்காதே!" என்று கூவிற்று பிச்ச பக்தர் கோஷ்டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/29&oldid=1033268" இலிருந்து மீள்விக்கப்பட்டது