பக்கம்:புராண மதங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



நோக்கம் இந்த நாட்டு மக்களின் அறிவை வளர விடாமல் தடுத்து வரும் சிலவற்றில் புராண - மதங்களும் சேர்ந்துள்ளதை எவ ரும் மறுக்க முடியாது. புராணம் - புண்ணியக் கதை - மதம் - மனிதனின் உயிர்நாடி என்று கூறிக்கொண்டு அதனையே கட்டி யழும் ஒரு சில வைதிகர்களுக்கும், புராண - மதங்களில் இருப் பது என்ன என்று தெரிந்து கொள்ள விழையும் சீர்திருத்த நோக்கம் படைத்த ஆராய்ச்சியாளருக்கும் இந்நூல் பெரிதும் துணை புரியும், என்பதே இதைத் திரட்டியதின் நோக்கமாகும். மதம்- மக்களுக்கு அபின்; புராணம் - போதை தரும் லேகி யம். என்று கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம்; படித்திருக்கி றோம். இருந்தபோதிலும், திராவிடரின் தனிப் பெருந் தலைவர் - சொல் அரசர், பேனா வீரர் - பகுத்தறிவு போதகர் - அறிஞர் அண்ணாதுரை அவர்கள் புராண மதங்களைப்பற்றி என்ன சொல்லி யிருக்கிறார் என்பதை தமிழ் மக்களுக்கு விளக்கவே இதை அவர் எழுதிய, பேசியவைகளில் இருந்து தொகுத்து நூலாக் கப்படுகிறது. இதை அறிவுக் கண்ணாடி போட்டு படிப்பவர்களு டைய , மத - மயக்கம் நீங்கும், புராணப் போதை தெளியும் என்பது என் துணிவான எண்ணம். புராண மதங்களைப்பற்றி அவர் என்ன கூறுகிறார் என் பதை அடுத்த பக்கத்திலிருந்து விளக்கப்பட்டுள்ளது. ஆகவே படியுங்கள் - தெளியுங்கள் - பிறருக்கு - தெளிவு படுத்துங்கள் நீங்கள் விரும்பினால்! வணக்கம் ஊடுருவி TN

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/5&oldid=1033244" இலிருந்து மீள்விக்கப்பட்டது