பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

151



விண்மீன்களை எண்ண முடியாது. அதே போல அவன் தந்த யானைகளையும் கணக்கிட்டுக் கூறமுடியாது.

குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள் வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து வேங்கை முன்றில் குரவை அயரும், தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன்ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல்இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று, வானம் மீன் பல பூப்பின், ஆனாது ஒரு வழிக் கரு வழி இன்றிப் பெரு வெள்ளென்னின், பிழையாதுமன்னே.

திணை - அது துறை - இயன்மொழி. அவனை அவர் பாடியது.

130. வேள் ஆய் அண்டிரன்

உன் நாட்டில் ஒரு பெண்யானை ஒரே ஈனில் பத்து யானை களையா தருகிறது.! உன்கொடைச் செயல் வியப்பாக உள்ளது.

நீ பரிசிலர்க்குத் தரும் யானைகளை எண்ணினால் அதற்கு உவமை கூற முடியாது. கொங்கரை மேற்குக் கடலுக்கு நீ ஒட்டி வெற்றி கொண்ட நாளில் அங்கு இருந்து கொண்டு வந்த வேல்களைவிட அவை பலவாகும். போர் வெற்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும் மிக்கவன் நீ!

விளக்கு மணிக் கொடும் பூண் ஆஅய்! நின்நாட்டு இளம்பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ?நின்னும் நின்மலையும் பாடி வருநர்க்கு, இன் முகம் கரவாது. உவந்து நீ அளித்த அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க் குட கடல் ஓட்டிய ஞான்றைத் தலைப்பெயர்த்திட்ட வேலினும் பலவே!

திணையும் துறையும் அவை,

அவனை அவர் பாடியது.