பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

181



என்றாலும் நீ நேராக வந்து மதித்துத் தந்தால்தான் பெறுவேன்; ஆட்கள் மூலம் அனுப்பினால் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டேன். யான் பாடிப் பெறும் பரிசில் குன்றி அளவு ஆயினும் நீ மகிழ்ந்து நேரில் தந்து வழி அனுப்பினால் மகிழ்ச்சி அடைவேன்.

‘வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின், தீர்தல் செல்லாது, என் உயிர் எனப் பல புலந்து, கோல் காலாகக் குறும் பல ஒதுங்கி, நூல் விரித்தன்ன கதுப்பினள், கண் துயின்று, முன்றில் போகா முதிர்வினள் யாயும்; பசந்த மேனியொடு படர் அட வருந்தி, மருங்கில் கொண்ட பல் குறுமாக்கள் பிசைந்து தின, வாடிய முலையள், பெரிது அழிந்து, குப்பைக் கீரை கொய்கண் அகைத்த முற்றா இளந் தளிர் கொய்துகொண்டு, உப்பு இன்று, நீர் உலையாக ஏற்றி, மோர் இன்று, அவிழ்ப் பதம் மறந்து, பாசடகு மிசைந்து, மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியாத், துவ்வாளாகிய என் வெய்யோளும்; - என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர் கரி புனம் மயக்கிய அகன்கண் கொல்லை, ஐவனம் வித்தி, மையுறக் கவினி, ஈணல்செல்லா ஏனற்கு இழுமெனக் கருவி வானம் தலைஇயங்கும், ஈத்த நின் புகழ் ஏத்தித் தொக்க என், பசி தினத் திரங்கிய, ஒக்கலும் உவப்பஉயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும், தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென் உவந்து, நீ இன்புற விடுதிஆயின், சிறிது குன்றியும் கொள்வல், கூர் வேற் குமண! அதற்பட அருளல் வேண்டுவல்-விறற் புகழ் வசை இல் விழுத் திணைப் பிறந்த இசை மேந் தோன்றல்! நிற் பாடிய யானே.

திணை - அது துறை - பரிசில் கடா நிலை.

அவனை அவர் பாடியது.