பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

183

நெறி கொள் வரிக் குடர் குளிப்பத் தண்ணெனக் குய் கொள் கொழுந் துவை நெய்யுடை அடிசில், மதி சேர் நாள்மீன் போல, நவின்ற சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇக், “கேடு இன்றாக, பாடுநர் கடும்பு” என, அரிது பெறு பொலங் கலம் எளிதினின் வீசி, நட்டோர் நட்ட நல் இசைக் குமணன், மட்டு ஆர் மறுகின், முதிரத்தோனே, செல்குவைஆயின், நல்குவன், பெரிது எனப், பல் புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து, உள்ளம் துரப்ப வந்தனென், எள்ளுற்று, இல் உணாத் துறத்தலின், இல் மறந்து உறையும் புல் உளைக் குடுமிப் புதல்வன் பல் மாண் பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன். கூழும் சோறும் கடைஇ, ஊழின் உள் இல் வறுங் கலம் திறந்து, அழக் கண்டு, மறப் புலி உரைத்தும், மதியம் காட்டியும், நொந்தனளாகி, நுந்தையை உள்ளிப், பொடிந்த நின் செவ்வி காட்டு எனப் பலவும் வினவல் ஆனாளாகி, நனவின் அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச், செல்லாச் செல்வம் மிகுத்தனை, வல்லே விடுதல் வேண்டுவல் அத்தை படு திரை நீர் சூழ் நிலவரை உயர, நின் சீர் கெழு விழுப் புகழ் ஏத்துகம் பலவே.

திணையும் துறையும் அவை,

அவனை அவர் பாடியது.

161. குமணன்

மழை பெய்யாமையால் கோடைக் காலத்தில் குடிக்கவும்

நீரில்லாமல் தவிப்போர் கங்கைக் கரையை நாடிச் செல்வர். அதுபோல உன்னை நாடி வரும் எமக்கும் பிறர்க்கும் செல்வம் வழங்கிச் சிறப்புச் செய்கிறாய்.