பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

27

உவவு மதி உருவின் ஓங்கல் வெண் குடை நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற, ஏம முரசம் இழுமென முழங்க, நேமி உய்த்த நேஎ நெஞ்சின், தவிரா ஈகைக், கவுரியர் மருக! செயிர் தீர் கற்பின் சேயிழை கணவ! பொன் ஓடைப் புகர் அணி நுதல், துன் அருந் திறல், கமழ் கடாஅத்து, எயிறு படையாக எயிற் கதவு இடாஅக் கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கின், பெருங் கை, யானை இரும் பிடர்த் தலை இருந்து,

மருந்து இல் கூற்றுத்து அருந் தொழில் சாயாக்

கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி! நிலம் பெயரினும், நின் சொல் பெயரல்; பொலங் கழற் கால், புலர் சாந்தின் விலங்கு அகன்ற வியல் மார்ப! ஊர் இல்ல, உயவு, அரிய, நீர் இல்ல, நீள் இடைய, பார்வல் இருக்கைக், கவி கண் நோக்கின், செந் தொடை பிழையா வன்கண் ஆடவர் அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத், திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும் உன்ன மரத்த துன் அருங் கவலை, நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் - அது முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர் இன்மை தீர்த்தல் வன்மையானே

திணையும் துறையும் அவை.

பாண்டியன் கருங்கை ஒள் வாள் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார்

பாடியது.

4. சோழன் உருவப்பல்தேர் இளஞ்சேட் சென்னி

குருதி படிந்ததால் உன்வாள் செக்கர் வானத்தைப் போல்

வனப்புப் பெற்று உள்ளது.