பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

35


உன் வெற்றிகளைச் சிறப்பித்துப் பாடும் பாடினி பொன் ஆபரணம் பெறுகிறாள்.

அப்பாடினி பாடும் பாடலுக்கு இசை கூட்டி யாழ் வாசிக்கும் பாண்மகனும் வெள்ளி நார் தொடுத்த பொற்றாமரை பெறுகிறான்.

அரி மயிர்த் திரள் முன்கை, வால் இழை, மட மங்கையர் வரி மணல் புனை பாவைக்குக் குலவுச் சினைப் பூக் கொய்து, தண் பொருநைப் புனல் பாயும் விண்பொரு புகழ் விறல் வஞ்சிப் பாடல் சான்ற விறல் வேந்தனும்மே, வெப்பு உடைய அரண் கடந்து, துப்பு உறுவர் புறம் பெற்றிசினே; புறம் பெற்ற வய வேந்தன் மறம் பாடிய பாடினியும்மே ஏர் உடைய விழுக் கழஞ்சின், சீர் உடைய இழை பெற்றிசினே; இழை பெற்ற பாடினிக்குக் குரல் புணர் சீர்க்கொளை வல் பாண் மகனும்மே, என ஆங்கு,

ஒள் அழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப் பெற்றிசினே. திணை - பாடாண் திணை, துறை - பரிசில் கட. நிலை.

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பேய்மகள் இளவெயினி பாடியது.

12. பாண்டியன் பல்யாக சாலை

முதுகுடுமிப் பெருவழுதி

பாணர்கள் பொற்றாமரையைப் பரிசிலாகப் பெறுகின்றனர். புலவர்கள் தேர்களைப் பெறுகின்றனர். உன் புகழ்பாடுவார் சிறப்புப் பெறுகின்றனர்.

நீ பிறர் மண் கொண்டு அங்குள்ள பொருள்களைக் கொள்ளை இடுகிறாய். அவற்றைக் கொண்டு உன்னை நாடி வருபவர்க்கு இனியவை செய்கிறாய்.