பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


தண்டா மாப் பொறி. மடக் கண் மயில் இயல் மறலியாங்கு, நெடுஞ் சுவர் நல் இல் புலம்பக், கடை கழிந்து, மென் தோள் மகளிர் மன்றம் பேணார், புண்ணுவந்து

உளை அணிப் புரவி வாழ்க எனச் சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர, நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர் அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா,

..........ற் றொக்கான வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை, மாடம் மயங்கு எரி மண்டிக், கோடு இறுபு, உரும் எறி மலையின், இரு நிலம் சேரச் சென்றோன் மன்ற, கொலைவன் சென்றெரி வெம்பு ண்ணறிநர் கண்டு கண் அலைப்ப, வஞ்சி முற்றம் வயக் களன். ஆக, அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக் கொண்டனை, பெரும குட புலத்து அதரி; பொலிக அத்தை, நின் பணைதயங்கு வியன்களம் விளங்கு திணை வேந்தர் களம்தொறும் சென்று, “புகர்முக முகவை பொலிக!” என்று ஏத்திக், கொண்டனர் என்ப, பெரியோர் யானும் அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற, முற்றிலேன்ஆயினும், காதலின் ஏத்தி, நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின், மன் எயில் முகவைக்கு வந்திசின், பெரும! பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத் தா இன்று உதவும் பண்பின், பேயொடு கண நரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து செஞ் செவி எருவை குழிஇ, அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே!

திணை - அது துறை - மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம்.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர் கிழார்

பாடியது.