25
ரா.சீ. 385
தன் அன்பு மனையாளின் அரவணைப்பில் துயின்று கொண்டிருந்த அவன் துயில் நீங்கி என்னை அழைப்பித்துச் சிறப்புகள் செய்தான். வறுமையை மறப்புறச் செய்தான். புது வாழ்க்கை அதில் பொலிவு காணச் செய்தான்.
அதுமுதல் பிறரைப் பாடுவதைப் புறக்கணித்தேன். அவனையே என் தலைவனாக ஏற்றேன். உயர் வாழ்வு பெற்றேன்.
தாய் மடிக்குப் பால் பருக அலைவுறும் ஆட்டுக்குட்டியும், நரை முகம் உடைய குரங்குக் குட்டியும் சேர்ந்து விளையாடும் மலை நாடன் அவியன். அறவழி நீங்காத மறப் பண்பினன். அவன் எமக்கு அரண் ஆவான். வெள்ளி நிலை மாறினாலும், நாடு வறன் உற்றாலும் அவன் எனக்கு அரண் தருவான்.
ஒண்பொறிச் சேவல் எடுப்ப, ஏற்றெழுந்து, தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி, நெடுங் கடை நின்று, பகடு பல வாழ்த்தித், தன் புகழ் ஏத்தினெனாக, ஊன் புலந்து, அருங்கடி வியன்நகர்க் குறுகல் வேண்டிக், கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உணப், பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின் கழை படு சொலியின் இழை அணி வாரா, ஒண் பூங் கலிங்கம் உடீஇ நுண் பூண் வசிந்து வாங்கு நுசுப்பின், அவ் வாங்கு உந்திக், கற்புடை மடந்தை தன் புறம் புல்ல, எற் பெயர்ந்த நோக்கி .............
- * * * - - - - - - - - - - - அதற் கொண்டு, அழித்துப் பிறந்தனெனாகி, அவ் வழிப், பிறர், பாடு புகழ் பாடிப் படர்பு அறியேனே, குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண் மறி, நரை முக ஊகமொடு, உகளும், வரையமல்..... * * - - - - - - குன்று பல கெழீஇய கான் கெழு நாடன், கடுந் தேர் அவியன், என ஒருவனை உடையேன்மன்னே, யானே; அறான்; எவன் பரிகோ, வெள்ளியது நிலையே?
திணையும் துறையும் அவை. ...மாறோக்கத்து நப்பசலையார் (அவியனைப்) பாடியது.