பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

39



பாடினி நீ போர் மேற் செல்வதைச் சிறப்பித்துப் பாடுவாள். வலிமை மிக்க வேந்தன் நீ!

நீ போரில் பகைவர்களை வெற்றி கொண்ட போர்க் களங்களா ஊரின்கண் நீ நடத்திய வேள்விகளா எவை மிகுதிப்

பட்டவை?

கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டிப் பாழ் செய்தனை, அவர் நனந்தலை நல் எயில்; புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல், வெள் உளைக் கலி மான் கவி குளம்பு உகளத் தேர் வழங்கினை, நின் தெவ்வர் தேஎத்துத் துளங்கு இயலான், பணை எருத்தின், பாவு அடியான், செறல் நோக்கின், ஒளிறு மருப்பின் களிறு அவர காப்பு உடைய கயம் படியினை, அன்ன சீற்றத்து அனையை: ஆகலின், விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு நிழல் படு நெடு வேல் ஏந்தி, ஒன்னார் ஒண் படைக் கடுந் தார் முன்பு தலைக்கொண்மார், நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய, வசை பட வாழ்ந்தோர் பலர்கொல்? புரை இல் நல் பனுவல், நால் வேதத்து, அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பல் மாண் வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, யூபம் நட்ட வியன் களம் பலகொல்? யா பலகொல்லோ? - பெரும வார் உற்று விசி பிணிக்கொண்ட மண் கனை முழவின் பாடினி பாடும் வஞ்சிக்கு நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.

திணையும் துறையும் அவை. பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார்

பாடியது.