பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

புறநானூறு செய்யுளும் செய்திகளும்

இனிது உருண்ட சுடர் நேமி முழுது ஆண்டோர் வழி காவல! குலை இறைஞ்சிய கோள் தாழை அகல் வயல், மலை வேலி, நிலவு மணல் வியன் கானல், தெண் கழிமிசைத் தீப் பூவின், தண் தொண்டியோர் அடு பொருந: மாப் பயம்பின் பொறை போற்றாது, நீடு குழி அகப்பட்ட பீடு உடைய எறுழ் முன்பின், கோடு முற்றிய கொல் களிறு நிலை கலங்கக் குழி கொன்று, கிளை புகலத் தலைக்கூடியாங்குநீ பட்ட அரு முன்பின் பெருந் தளர்ச்சி பலர் உவப்பப் பிறிது சென்று, மலர் தாயத்துப் பலர் நாப்பண் மீக்கூறலின், ‘உண்டாகிய உயர் மண்ணும், சென்று பட்ட விழுக் கலனும், பெறல் கூடும், இவன் நெஞ்சு உறப் பெறின் எனவும், ‘ஏந்து கொடி இறைப் புரிசை, வீங்கு சிறை, வியல் அருப்பம், இழந்து வைகுதும், இனி நாம் - இவன் உடன்று நோக்கினன், பெரிது எனவும், வேற்று அரசு பணி தொடங்கு நின் ஆற்றலொடு புகழ் ஏத்திக் காண்கு வந்திசின், பெரும ஈண்டிய மழை என மருளும் பல் தோல், மலை எனத் தேன் இறை கொள்ளும் இரும் பல் யானை, உடலுநர் உட்க வீங்கிக் கடல் என வான் நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப, இடி என முழங்கும் முரசின், வரையா ஈகைக் குடவர் கோவே!

திணை - வாகை, துறை - அரச வாகை, இயன்மொழியும் ஆம். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால்

பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதின் போய்க் கட்டில் எய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.