பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

49



உன்னிடம் பரிசு பெறுபவர் வேறு இடம் செல்ல நினைப்பது இல்லை.

நீ காக்கும் நாடு தேவர் உலகத்திலும் சிறந்தது என்று சொல்லக் கேட்டேன். உன்னைக் காண வந்துள்ளேன். -

நீ மேலும் பலபோர்கள் நடத்திப் புகழ் பெறுக; வீரர்களுக்குச் சோறு தந்து உன் படை வீரர்கள் மேலும் செயல்பட ஊக்குவிப்பாயாக!

தூங்கு கையான் ஓங்கு நடைய, உறழ் மணியான் உயர் மருப்பின, பிறை நுதலான் செறல் நோக்கின, பா அடியான் பணை எருத்தின, தேன் சிதைந்த வரை போல, மிஞ்று ஆர்க்கும் கமழ் கடாத்து, அயறு சோரும் இருஞ் சென்னிய, மைந்து மலிந்த மழ களிறு கந்து சேர்பு நிலைஇ வழங்கப் பாஅல் நின்று கதிர் சோரும் வான் உறையும் மதி போலும் மாலை வெண் குடை நீழலான், வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க, அலங்கு செந்நெற் கதிர் வேய்ந்த ஆய் கரும்பின் கொடிக் கூரை, சாறு கொண்ட களம் போல, வேறு வேறு பொலிவு தோன்றக் குற்று ஆனா உலக்கையால் கலிச் சும்மை வியல் ஆங்கண், பொலந் தோட்டுப் பைந் தும்பை மிசை அலங்கு உளையப் பனைப் போழ் செரீஇச் சின மாந்தர் வெறிக் குரவை ஓத நீரின் பெயர்பு பொங்க வாய் காவாது பரந்து பட்ட வியன் பாசறைக் காப்பாள! வேந்து தந்த பணி திறையான் சேர்ந்தவர்தம் கடும்பு ஆர்த்தும், ஓங்கு கொல்லியோர், அடு பொருந!