பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

57


அத்தகைய வளம்மிக்க வயல்கள் உடைய மருத நிலங்களை

நீ பெற்றிருக்கிறாய்.

அறம் செய்து மேன்மை அடைவதற்கு உனக்கு வாய்ப்புகள் உள்ளன; வளமும் உள்ளது. அதனால் உன் செல்வத்தைக் கொண்டு அறம், பொருள், இன்பம் இப் பேறுகளைப் படைத்துக் கொள்க. இவற்றை நீ அடைய முயலாவிட்டால் நீ பெற்றுள்ள செல்வம் பயனற்றதாகிவிடும். நீ உன்னைப் போற்றிக் கொள்ளாமை ஆகிவிடும்.

‘சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும், கூனும், குறளும், ஊமும், செவிடும், மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் பேதைமை அல்லது ஊதியம் இல் என, முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும், அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்ததுவட்ட வரிய செம் பொறிச் சேவல் ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் கானத்தோர், நின் தெவ்வர் நீயே, புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர் புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப் பூம் போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர் ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே, அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் ஆற்றும், பெரும! நின் செல்வம்: ஆற்றாமை நின் போற்றாமையே.

திணையும் துறையும் அவை,

அவனை அவர் பாடியது.

29. சோழன் நலங்கிள்ளி

தினமும் நாள் மகிழ் இருக்கையில் நீ பாணர்க்குப் பொற்றாமரை தந்து சிறப்புச் செய்க.

நாள் மகிழ் அவையில் பாணரைவிட்டு நீங்கிப் பின் நின் உரிமை மகளிரைத் தழுவி மகிழ்க, இன்ப வாழ்வு இயைவதாக.