பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



நன்மை செய்தால் அதை மறப்பவர்க்கு மாற்று உய்வு இல்லை என்று அறநூல்கள் கூறி இருக்கின்றன.

காலையும் மாலையும் வரகுச் சோறு உண்டுவரும் எளியவர்க்கு இலந்தி மன்றத்தில் அன்பு மொழி பேசி அருகிருந்து கறிசோறு உண்பித்து அவர்க்கு வேண்டிய செல்வம் அளித்தவன்; “எங்கோன் வளவன் வாழ்க என்று அவனைச் சிறப்பித்துப் பாடேனாயின் சூரியனும் உதிக்கமாட்டான்.

இவ் உலகத்தில் சான்றோர் செய்த நன்மைகள் நிலைப்பதால் மழை பெய்கிறது; இமயத்தில் பெய்யும் மழைத் துளியினும் நீ பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

‘ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும், மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும், குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும், வழுவாய் மருங்கில் கழுவாயும் உள’ என, ‘நிலம் புடைபெயர்வது.ஆயினும், ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என, அறம் பாடிற்றே- ஆயிழை கணவ! ‘காலை அந்தியும், மாலை அந்தியும், புறவுக் கரு அன்ன புன் புல வரகின் பால் பெய் புன்கம் தேனொடு மயக்கிக் குறு முயற் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு, இரத்தி நீடிய அகன் தலை மன்றத்துக் கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி, அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், எம் கோன், வளவன் வாழ்க!’ என்று, நின் பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின், படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்; யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்துச் சான்றோர் செய்த நன்று உண்டாயின், இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றிக் கொண்டல் மா மழை பொழிந்த நுண் பல் துளியினும் வாழிய, பலவே!

திணை - பாடாண் திணை, துறை - இயன்மொழி. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்துர் கிழார் பாடியது.