பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

75



பழி சுமத்திய யானே தவறு செய்தவன்; வருந்துகிறேன். நீ மறுப்புக் கூறாமல் அமைதி காத்தாய்; தவறு செய்திருந்தால் மன்னிக்க’ என்று அடக்கம் காட்டினாய். இது வியப்பாக உள்ளது.

தம்மை இழிவுபடக் கூறினாலும் அவர்களைப் பொறுப்பது உன் குடி மரபினர்க்கு உள்ள இயல்பு போலும். அவ்வியல்பையே

நீ வெளிப்படுத்தினாய்.

பிழை செய்தது யான்; உன்னை வாழ்த்துகிறேன். காவிரிக் கரையின் மணல் மேட்டில் உள்ள மணலினும் பல ஆண்டுகள் நீ வாழ்வாயாக.

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத் தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கிக் கால் உணவு ஆகச் சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக் கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து, ஒரீஇத் தன் அகம் புக்க குறு நடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக! நேரார்க் கடந்த முரண் மிகு திருவின் தேர்வண்கிள்ளி தம்பி! வார் கோல், கொடுமர மறவர் பெரும கடு மான் கை வண் தோன்றல்! ஐயம் உடையேன் : ‘ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது நீர்த்தோ நினக்கு? என வெறுப்பக் கூறி, நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும், நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே: தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் எனக் காண்தகு மொய்ம்ப காட்டினை ஆகலின், யானே பிழைத்தனென் சிறக்க நின் ஆயுள்மிக்கு வரும் இன் நீர்க் காவிரி எக்கர் இட்ட மணலினும் பலவே! திணையும் துறையும் அவை, சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணனும் வட்டுப் பொருவழிக் கை கரப்ப, வெகுண்டு வட்டுக் கொண்டு எறிந்தானை, சோழன் மகன் அல்லை என நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது.