பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



புறநானூறு ஒர் அறிமுகம்

இப்பாடல்கள் பல அரிய செய்திகள் கொண்டு விளங்குகின்றன.

தமிழர் போற்றிய உயர் கோட்பாடுகள், சிந்தனைகள் இதில் தலைமை இடம் பெறுகின்றன. உயர்ந்த கருத்துகள், அவர்கள் வாழ்க்கை அணுகுமுறைகள் இவற்றைக் காட்டுகின்றன. இவ்வகையில் ஒளிகாட்டும் நூல் இது என்று கூறலாம்.

கவிதைக்கு உண்மைதான் உயிர் நாடி என்பதைக் காட்டுவது புறநானூறு. வாழ்க்கையில் அவர்கள் கண்டது; அறிந்தது; தெளிந்தது இவற்றையே கூறுகின்றது.

வீரம்; கொடை இவற்றை மிகுதியாகக் காட்டுகின்றது. அறவாழ்வை அறிவிப்பதில் இது ஒரு திருக்குறளாக விளங்குகிறது. அறம், பொருள், இன்பம் இம்மூன்று பற்றிய கருத்துகளைத் தருகிறது.

கவிதைக்கு உள்ளடக்கம் அடிப்படை, இவ்வகையில் இது உயர்ந்து விளங்குகிறது. தமிழர் வாழ்வியல் இதன் உள்ளடக்க மாகும். இப்பாடல்கள் இன்றும் வழிகாட்டுவனவாக விளங்கு கின்றன. வாழ்க்கையில் போராடும் திறன் அடிப்படை. புற நானூறு அஞ்சி ஒதுங்குவதை அறவே ஒதுக்குகிறது. துறவு’ என்பது தப்பித்துக் கொள்வது; அதற்குப் புறநானூறு மிக்கு இடம் தரவில்லை; துறவு பற்றிக் கூறுவது மிகவும் குறைவு; இது இதன் தனிச் சிறப்பு ஆகும்.

வாழ்க்கையை அவர்கள் சந்தித்தனர்; வீரத்தோடு வாழ்ந் தனர். போராட்டம் கண்டு அஞ்சியது இல்லை; பொருள் ஈட்டுதல் பிற்றாக்கும் பயன்படுவதற்கே என்ற கோட்பாட்டை இந்நூல் முழுவதும் வற்புறுத்துகிறது.

‘மகிழ்வுடன் வாழ்க; புகழொடு வாழ்க’ என்பது இது அறிவிக்கும் கோட்பாடு.

உயர்ந்த கருத்துகளைக் கொண்டது; வாழ்க்கைக்கு வழிகாட்டி உயர் சிந்தனைகளை வெளிப்படுத்துவது.