பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



இதுவே யான் வேண்டுவது; அவனை மதித்துப் போற்றும்

புலவன் யான்.

கோதை மார்பின் கோதையானும், கோதையைப் புணர்ந்தோர் கோதையானும், மாக் கழி மலர்ந்த நெய்தலானும், கள் நாறும்மே, கானல்அம் தொண்டி, அஃது எம் ஊரே அவன் எம் இறைவன்; அன்னோற் படர்திஆயின், நீயும் எம்மும் உள்ளுமோ - முதுவாய் இரவல!'அமர் மேம்படுஉம் காலை, நின் புகழ் மேம்படுநனைக் கண்டனம் எனவே,

திணை- பாடாண் திணை, துறை - புலவராற்றுப் படை சேரமான் கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடியது.

49. சேரமான் கோக்கோதை மார்பன்

கோதை மார்பன் ஆகிய எம் வேந்தை யான் எப்படி அழைப்பது? மலை நாடன் என்று கூறுவதா? மருத நிலத் தலைவன் என்று கூறுவதா? கடல் நிலத்தை உடைய சேர்ப்பன் என்று கூறுவதா? எவ்வாறு அவனை விளிப்பது?

அவன் நாட்டில் குறிஞ்சி நிலத்தில் வாழும் எயினர் கிளிகளை ஒட்ட அவர்கள் தம் தட்டையைப் புடைத்தால் அதன் ஒலி மருத நிலத்துக் கழனிகளிலும், நெய்தல் நிலத்துக் கடற் கரையிலும் சென்று ஒலிக்கிறது. அங்கு உள்ள பறவைகள் மேலே எழுகின்றன. அதனால் இம் மூன்று நிலத்துக்கும் அவன் உரியவன் ஆகிறான்.

நாடன் என்கோ? ஊரன் என்கோ? பாடு இமிழ் பனிக் கடற் சேர்ப்பன் என்கோ? யாங்கனம் மொழிகோ, ஓங்கு வாட் கோதையை?புனவர் தட்டை புடைப்பின், அயலது இறங்கு கதிர் அலமரு கழனியும், பிறங்கு நீர்ச் சேர்ப்பினும், புள் ஒருங்கு எழுமே!

திணையும் துறையும் அவை துறை - இயன்மொழியும் ஆம். அவன் அவர் பாடியது.