பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


படையுடன் உன் சேனை மாட்சிமை பெற்றிருந்தாலும் அறநெறி ஒட்டியே அரசுக்கு வெற்றி அமைவது ஆகும். அறநெறி அரசுக்கு அடிப்படையாகும்.

அதனால் நம்மவர் என்று நீதி பிழையாதே! பிறர் என்று அவர்களுக்கு அநீதி இழைக்காதே! ஞாயிறுபோல ஒறுத்தலும், திங்களைப் போலத் தணிவும், வானத்து மழையைப் போல வழங்கலும் உடையையாகி விளங்குக! வறியவர் இல்லையென்று கூறும்படி அவர்கள் இன்மையைப் போக்குக! கடல் அலை அலைக்கும் செந்திலில் முருகவேள் நிலைத்துள்ள நீர்த் துறை அங்குத் தொகுத்துள்ள எக்கர் மணலினும் பல ஆண்டுகள் வாழ்வாயாக.

ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளிஇ, ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றிப் பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப் பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல, வேந்து மேம்பட்ட பூந் தார் மாற!கடுஞ் சினத்த கொல் களிறும், கதழ் பரிய கலி மாவும், நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என நான்குடன் மாண்டது.ஆயினும், மாண்ட அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்: அதனால், நமர் எனக் கோல் கோடாது, ‘பிறர் எனக் குணம் கொல்லாது, ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும், திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும், வானத்து அன்ன வண்மையும், மூன்றும், உடையை ஆகி, இல்லோர் கையற, நீ நீடு வாழிய - நெடுந்தகை!- தாழ் நீர் வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறைக் கடு வளி தொகுப்ப ஈண்டிய வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே! திணை - பாடாண் திணை: துறை - செவியறிவுறுஉ

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.