பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

புறநானூறு செய்யுளும் செய்திகளும் நீயே, தண் புனற் காவிரிக் கிழவனை இவனே, முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக் கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்குத் தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது, நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ இளையது ஆயினும் கிளை அரா எறியும் அரு நரை உருமின், பொருநரைப் பொறாஅச் செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே, அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே, நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என, வரைய சாந்தமும், திரைய முத்தமும், இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே; பால் நிற உருவின் பனைக் கொடியோனும், நீல் நிற உருவின் நேமியோனும், என்று இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு, உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி, இன்னிஆகலின், இனியவும் உளவோ? இன்னும் கேண்மின் நும் இசை வாழியவே; ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும் உடன் நிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப் பெளவம் உடுத்த இப் பயம் கெழு மாநிலம் கையகப்படுவது பொய் ஆகாதே; அதனால், நல்ல போலவும், நயவ போலவும், தொல்லோர் சென்ற நெறிய போலவும், காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும் ஏதில்மாக்கள் பொதுமொழி கொள்ளாது, இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக் கோண்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே.

திணை - பாடாண் திணை, துறை - உடனிலை.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன்

வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.