பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

புறநானூறு - மூலமும் உரையும்


(தமக்கு உதவியோனாகிய வேந்தன் நெடிது வாழ்கவென வாழ்த்திப் பாடிய செய்யுள் இது. "பிறர்க்கு உவமம் தானல்லது, தனக்கு உவமம் பிறர் இல்லென” என, உயர்ந்தோரை உரைப்பது நயப்பாடு உடையதாகும்)

பனி பழுநிய பல் யாமத்துப்

பாறு தலை மயிர் நனைய, இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின், இணையல் அகற்ற என் கிணைதொடாக் குறுகி, 'அவி உணவினோர் புறங் காப்ப, 5

அற நெஞ்சத்தோன் வாழ, நாள் என்று, அதற் கொண்டு வரல் ஏத்திக்

"கரவு இல்லாக் கவிவண் கையான் வாழ்க!" எனப் பெயர் பெற்றோர்

பிறர்க்குஉவமம் தான் அல்லது 1 O

தனக்குஉவமம் பிறர்இல், என

அது நினைத்து, மதி மழுகி,

ஆங்கு நின்ற எற் காணுஉச்

'சேய் நாட்டுச் செல் கிணைளுனை!

நீபுரவலை எமக்கு என்ன, 15

மலைபயந்த மணியும், கடறுபயந்த பொன்னும், கடல்பயந்த கதிர் முத்தமும், . வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும் கனவிற் கண்டாங்கு, வருந்தாது நிற்ப, நனவின் நல்கியோன், நசைசால் தோன்றல்; 2O நாடுஎன மொழிவோர் அவன் நாடென மொழிவோர் வேந்தென மொழிவோர், அவன் வேந்தென மொழிவோர்;

“. பொற்கோட்டு யானையர்

கவர் பரிக் கச்சை நன்மான் - வடி மணி வாங்கு உருள * - 25

‘..... நல்தேர்க் குழுவினர், கதழிசை வன்கணினர், வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டிக், கடல்ஒலி கொண்ட தானை அடல்வெங் குருசில்! மன்னிய நெடிதே! 3O

(1. புகர் நுதல் அவிர் பொற் கொட்டு, 2. கொடி மிசை நல் தேர்க் - வேறு பாடங்கள்)