பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

புறநானூறு - மூலமும் உரையும்


42.ஈகையும் வாகையும் -

பாடியவர்: இடைக்காடனார். பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். திணை: வாகை. துறை: அரச வாகை, சிறப்பு: சோழனின் மற மேம்பாடும், கொடை மேம்பாடும், வலிமைச் சிறப்பும். - -

('அரசனது வெற்றி உறுதியைக் கூறுதலால் அரசவாகை

ஆயிற்று. 'கொள்ளார் தேஎங் குறித்த கொற்றம் என்னும் துறைக்கு நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுவர் (தொல் புறத். சூ. 12); இளம்பூரணரும் அவ்வாறே காட்டுவர் (சூ.10). புலவர் கூட்டம் இவனை அடைந்து பயன்பெற்றதனை, மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி, நிலவரை இழிதரும் பல்யாறு போலப் புலவர் எல்லாம் நின்னோக்கினரே என்றனர்; இஃது இவனருளைக் காட்டும்)

ஆனா ஈகை, அடுபோர், அண்ணல் நின் யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின் தானையும் கடலென முழங்கும் கூர்நுனை வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின், 5

புரைதீர்ந்தன்று, அது புதுவதோ அன்றே: தண்புனற் பூசல் அல்லது, நொந்து, "களைக வாழி, வளவ! என்று, நின் முனைதரு பூசல் கனவினும் அறியாது, . புலிபுறங் காக்கும் குருளை போல, 10 மெலிவில் செங்கோல் நீயுறங் காப்பப், பெருவிரல் யாணர்த் தாகி, அரிநர் கீழ்மடைக் கொண்டவாளையும், உழவர் படைமிளிர்ந் திட்ட யாமையும், அறைநர் கரும்பிற் கொண்டதேனும், பெருந்துறை 15

நீர்தரு மகளிர் குற்ற குவளையும், வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும் மென்புல வைப்பின் நன்னாட்டு பொருந! மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி, நிலவரை இழிதரும் பல்யாறு போலப், 2O புலவ ரெல்லாம் நின்நோக்கினரே, நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக் கூற்றுவெகுண் டன்ன முன்பொடு, மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே.