பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

புறநானூறு - மூலமும் உரையும்



கள்நாறும்மே, கானல்அம் தொண்டி, அஃதுஎம் ஊரே, அவன்எம் இறைவன்; 5 எம்மும் உள்ளுமோ, முதுவாய் இரவல, 'அமர்மேம்படுஉங் காலை, நின் புகழ்மேம்படுநனைக் கண்டனம், எனவே.

/

சேரமான் மார்பில் விளங்கும் மாலையாலும், சேரமானை மணந்த மகளிர் சூடிய மாலையாலும், பெரிய கழியிடங்களிலே மலர்ந்த நெய்தற்பூவாலும், தேன் மணம் வீசிக் கொண்டிருக்கும் கானலையுடையது எம் தொண்டி அதுதான் எமது ஊர். அச் சேரமான் எம் இறைவன்! அவனிடம் நீயும் போவதாயின் முதிய வாய்மையாளனான இரவலனே, போர்க்களங்களில் வெற்றி பெறும்போது நின் புகழ் போற்றுவானை யாம் கண்டோம் என எம்மையும் மறவாது சொல்வாயாக! (சொன்னால், உறுதியாக மிக்க பரிசிலைப் பெறுவாய் என்பது கருத்து)

சொற்பொருள்:3. மாக்கழி மலர்ந்த கரிய கழியின்கண் மலர்ந்த, 4. கானல் - கடற்கரை, காணல்’ என்பதும் பாடம். 6. படர்தி ஆயின் போகின்றா யாயின்

49. எங்ங்னம் மொழிவேன்?

- பாடியவர்: பொய்கையார். பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்ன். திணை: பாடாண். துறை: புலவராற்றுப் படை - -

(பெருஞ் செல்வம் உடையவன். நீ அவன்பாற் செல்க என ஆற்றுப்படுத்தினர். அரசனது இயல்பைப் புகழ்ந்தமையால் இயன்மொழியாகவும் கொள்ளப்படும். அவனிடம் ஆற்றுப் படுத்தியமையால் புலவராற்றுப் படையும் ஆகும்)

நாடன் என்கோ? ஊரன் என்கோ, பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ, யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை? புனவர் தட்டை புடைப்பின், அயலது - இறங்குகதிர் அலமரு கழனியும், 5 . பிறங்குநீர்ச் சேர்ப்பினும், புள் ஒருங்கு எழுமே. புனங்காப்போர் தட்டையை அடித்து ஒலி எழுப்பினால், பக்கத்திலுள்ள கதிர் தலை சாய்ந்து அசையும் வயலிலும் , மிக்க நீரையுடைய கடற்கரையிலுமுள்ள பறவையினங்கள் ஒருசேர எழுகின்றனவே! அதனால், மேம்பட்டவனான கோதையை, நாடன் என்று நவில்வேனா? ஊரன் என்று உரைப்பேனா? சேர்ப்பன் என்று சொல்வேனா? எவ்வாறு கூறுவேன் யான்? -