பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.. uါui4 Gခါဧခါး၊ 女 உயினைப் படலம் 89 வாள் நாட்கோளினைக் கண்டார், அதனால் பகைவரது அரணிடம் அழியப்போகின்ற நிலையினைக் கூறித்தம் அரசனின் வெற்றிச் செவ்வியைப் போற்றியது இது. திணை தொறும் வருகின்ற வாள் நாட்கோள், குடைநாட்கோள் ஆகியவற்றின் வேறுபாடுகளைத் தெளிவாக அறிதல் வேண்டும்; மயங்கல் கூடாது. பேம்-அச்சம். 3. முரச உழிஞை பொன்புனைஉழிஞை சூடிமறியருந்தும் திண்புணிமுரசநிலையுரைத்தன்று. . ஆடுவெட்டியிடுகின்ற பலியினை நுகராநின்ற, திண்ணிதாக வாராற் கட்டின முரசத்தினது நிலையினைப் பொன்னாலே செய்த உழிஞை மாலையினைச் சூட்டியவராக, உழிஞையார் தொழுது போற்றுவது, முரச உழிஞை ஆகும். கதிரோடை வெல்களிறு பாயக் கலங்கி உதிரா மதிலும் உளகொல்-அதிருமால் பூக்கண் மலிதார்ப் புகழ்வெய்யோன் கோயிலுள் மாக்கண் முரச மழை. . 98 மலர்கள் மிகுந்த மாலையினை உடையோனும், புகழ் விருப்பினனுமாகிய நம் மன்னவனின் மாளிகையிடத்துப் பெரிய கண்ணினையுடைய வீரமுரசும் முகில்போல முழக்கமிடுகின்றது; இனி, ஒளியாற் சிறந்த நெற்றிப் பட்டத்தினையுடையவும், வெற்றிகொள்பவுமான நம்முடைய போர்க்களிறுகள் குத்திப்பாயக், குலைந்து சிதறிப்போகாத மதில்களும் பகைவரிடத்தே உளவாமோ? - வீரமுரசத்தினது முழக்கம், இடிமுழக்கம்போன்று எழுந்தது என்பார், முரச மழை என்றனர். அந்த முழக்கம் பகைவரது அரண்களது அழிவினது முன்னதாகவே அறிவிப்பது எனப் புகழ்ந்தது இது. - - 4. கொற்ற உழிஞை அடையாதார் அரண்கொள்ளிய . படையொடுபரந்தெழுந்தன்று. தன்னைப் பணிந்து சேராத பகைவரது அரணிடத்தைக் கொள்வதன்பொருட்டாக, உழிஞை வேந்தன்,தன்படையொடும் கைவளர்ந்துசென்றது,கொற்ற உழிஞை எனப்படும்.கைவளர்தல். பரந்து செல்லல். • . /