பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இன்னலுற்றல், கொடுக்கவென உயர்ந்தோர் கூறும் காலையிலே கொடுப்பதாம். அதனால், வேறுபடுத்துத் தனியாகக் கூறினார். பருக்காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக் குருக்கண் கயிலை கொடுத்தான்-செருக்கோடு இடிமுரசத் தானை இகலிரிய எங்கோன் - கடிமுரசம் காலைச் செய. - 2O2 எம் கோமானான மன்னன், களிப்போடு இடிபோல முழங்கும் முரசினையுடைய மாற்றாரது சேனை மாறுபாடு கெடும்படியாகக், காவன் முரசம் நாட்காலையிலே முழங்கப், பருத்த மணிகளையும் செம்பொன்னையும் பார்ப்பார் தாமே முகந்து கொள்ளா நிற்ப, மேலும், அவருக்கு நிறம்கொண்ட கண்களையுடைய பசுக்களையும் தானமாகக் கொடுத்தான். 14. வேள்வி நிலை அந்தமில் புகழான் அமரரும் மகிழச் செந்தீவேட்ட சிறப்புரைத் தன்று. முடிவில்லாத புகழினையுடைய மன்னன், தேவர்களும் மகிழும்படியாகச் செந்தீ வேட்டுச் செய்த சிறப்பினை உரைத்தது, வேள்வி நிலை ஆகும். - கேள்வி மறையோர் கிளைமகிழ்தல் என்வியப்பாம் வேள்வி விறல்வேந்தன் தான்வேட்ப-நீள்விசும்பின் ஈர்ந்தார் இமையோரும் எய்தி அழல்வாயால் ஆர்ந்தார் முறையால் அவி. - 203 வேள்வி இயற்றலை வெற்றிவேந்தன் செய்யா நிற்ப, நெடிய விசும்பிடத்தவரான ஈரத்தாற் சிறந்த மாலையினையுடைய இமையவர்கள் வந்தடைந்து, அழலாகிய வாயாலே இட்ட அவியினை அருந்தினார்கள். அங்ங்னமாகக், கேள்வியினை யுடைய மறையவர்களது சுற்றம் மகிழ்தல் என்ன வியப்பு ஆகும்? அவரும் வேள்விக் காலத்தே ஏராளமான கொடைப் பொருளைப் பெற்றனர் என்பது கருத்து. - 15. வெள்ளி நிலை துயர்தீரப் புயல்தருமென - உயர்வெள்ளிநிலையுரைத்தன்று. உயர்ந்த வெள்ளி என்னும் கோளானது, உலகத்தின் துயர் தீருமாறு மழையினைத் தரும் என்று சொல்லி, அதனது சிறந்த தன்மையைக் கூறியது, வெள்ளி நிலை ஆகும். .