பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

isolusië gefas " uit is u-oli 177 'வாயுறை வாழ்த்து வயங்க நாடின், வேம்புங்கடுவும் போல வெஞ்சொல், தாங்குதலின்றி வழிநளிை பயக்குமென்று, ஒம்படைக் கிளவியின் வாயுறுத் தன்றே-(தொல், செய்யுளியல். சூ. 12) எனத் தொல்காப்பியரால் விளக்கப்படும். வாயுறை-சொல் மருந்து. இதற்கு ஒரு தலைவன் வேண்டான் ஆயினும், அவர்க்கு உறுதிபயத்தலைச் சான்றோர் வேண்டுவர். வாய்மொழி மருங்கினால் அவனை வாழ்ச்சிப் படுத்துவர். கைக்கிளைப் புறனாகிய பாடாண் இது. இருங்கடல் உடுத்த பெருங்கண் மாநிலம்’ என்னும் ஐயாதிச் சிறுவெண் தேரையாரின் புறப்பாட்டும் இதற்கு நல்ல உதாரணமாகும்.(புறம்-363) 'எருமையன்ன என்னும் புறப்பாட்டையும் நோக்குக-(புறம்-5). எஞ்சொல் எதிர்கொண்டிகழான் வழிநிற்பிற் குஞ்சர வெல்படையான் கொள்ளானோ-எஞ்சும் இகலிடன் இன்றி எறிமுந்நீர் சூழ்ந்த - அகலிடம் அங்கை அகத்து. 220 எம்முடைய வார்த்தையை எள்ளானாகி ஏற்றுக் கொண்டு, அதன் வழித்தாய் இவன் நிற்பின், வெல்லும் யானைப் படையினனான நம் வேந்தன், அலையும் கடல்பரந்த பூமியிடம் எல்லாம், ஒழியும் பகைநிலம் ஏதும் இல்லாமற் படிக்குத் தன் உள்ளங்கையி னிடத்தாகக் கைக்கொள்ள மாட்டானோ? 'கைக்கொள்வான்’ என்பது குறிப்பு. 32. செவியறிவுறுஉ மறந்திரி வில்லா மன்பெருஞ் சூழ்ச்சி அறந்தெரி கோலாற் கறிய உரைத்தன்று. அறத்தினை ஆராயும் செங்கோலினை உடையானுக்கு, மறமும் திரிவும் இல்லாத,நின்று நிலைத்த பெரிய எண்ணத்தினை, அவன் உணரும்படியாகக் கூறியது, செவியறிவுறுஉ ஆகும். செவியுறைதானே, பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண், அவிதல் கடனெனச் செவியுறுத் தற்றே என்னும் செய்யுளியல் சூத்திரத்தையும் காண்க:(தொல், செய். 114). 'இயல்பாகிய குணங்கூறி, அவற்றொடு செவியுறையும் கூறுவர்; செவியுறைப் பொருள் சிறப்புடைத் தென்று அவன் கருதி வாழ்தல் வேண்டி’ என்ற முறைமையினையும் கருத்திற் கொள்க. - அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தைதாய் என்றிவர்க்குத் தார்வேந்தே-முந்தை வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி மொழிநின்று கேட்டன் முறை. 221