பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் உளைத்தவர் கூறும் உரையெல்லாம் நிற்க முளைத்த முறுவலார்க் கெல்லாம்-விளைத்த பழங்கள் அனைத்தாய்ப் படுகளி செய்யும் முழங்கு புனலூரன் மூப்பு. வெறுத்தவரான மகளிர் உரைக்கும் சொற்களெல்லாம் நிற்க, ஆரவாரிக்கும் நீரானே சிறந்த ஊரினையுடைய த்லைவனது முதுமையும், தோன்றிய பல்வரிசையினை உடையவராய பரத்தையர்கட் கெல்லாம், ஆக்கின பழங்கள்ளைப் போன்றதாக விளங்கி, மிக்க களிப்பினைச் செய்யுமே! 338 . 'மூப்புப் பழங்கள் அனைத்தாய்ப் படுகளி செய்யும் எனத் தலைவன் முதுமையாளனாகி, இளம் பரத்தையரை நாடித் திரிந்தமை தோன்றக் கூறினர். இதுவும் இளமை தீர் திறம். 34. பரத்தை வாயில் பாங்கி கண்டுரைத்தல் உம்மில் அரிவை உரைமொழி ஒழிய எம்மில் வலவனும் தேரும் வருமெனப் பரத்தை வாயிற்குப் பாங்கி பகர்ந்தன்று. 'உம்முடைய இல்லத்தவளான மடந்தை உரைத்த சொற்கள் பழுதுபட்டு ஒழியும்படியாகத் தலைவனுடைய வலவனும் தேரும் எம்முடைய இல்லத்திற்கு வருமென்று சேரிப்பரத்தையின் தோழி, இற்பரத்தையின் தோழிக்குக் கூறியது, பரத்தை வாயில் பாங்கிகண்டு உரைத்தல் ஆகும். - மாணலம் கொள்ளும் மகிழ்நன் தணக்குமேற் பேணலம் பெண்மை ஒழிகென்பார்-காணக் கலவ மயிலன்ன காரிகையார் சேரி வலவன் நெடுந்தேர் வரும். 339 'மாட்சிமைப்பட்ட எமது அழகினை நுகருகின்ற தலைவன் எம்மை நீங்குவானாயின், எம்பெண்மையையாம் பேணுதலையும் செய்யோம்; அது கெடுவதாக’ என்று சொல்லுகின்ற இற்பரத்தையர் கண்டிருப்பவே, தோகையுடைய மயிலைப் போன்ற பரத்தையருடைய சேரியிடத்தாக, பாகனையுடைய தலைவனது நெடிய தேரும் வாராநிற்கும். - 35. பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல் மற்றவர் சேரியின் மைந்தன் உறைந்தமை இற்றென விறலி எடுத்துரைத் தன்று. பரத்தையரது சேரியிடத்தே தலைவன் தங்கின நிலைமையை இப்படிப்பட்டதெனப் பாணிச்சி தலைவிக்கு எடுத்துரைத்தது, பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல் ஆகும்.