பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களத்திடத்தே செலுத்தினான். లోulēLLEఅతీLలు_3 நீங்காத மறமாண்பினைக் கொண்டோனான காஞ்சி மன்னன், அரிய வெற்றிச் சிறப்பினையுடைய பகைமன்னரும் வியப்புக்கொள்ளுமாறும்,பருந்தும் கழுகும் இழுத்துக்கொண்டு செல்லுமாறும், கருந்தலையும், வெள்ளிய நினமும், சிவந்த தசையும் எங்கனும் மிகுமாறு, தனது மறத்தொழிலைக் தடி தசை மறம்:மறத்தொழில் பகைமன்னர் வியத்தல், இவனது போர்மறத்தினைக் கண்டு. பருந்தும் கழுகும் படர்தல், அவனால் தமக்குப் பிணங்கள் மிகுதியாகக் கிடைக்கும் என்றதனால். இது, அவன் முன்பும் களங்களில் காட்டிய மறமாண்பினை உடையவன் என்றற்காம் . . . . 14. மறக்காஞ்சி-2 மண்கெழு மறவன் மாறுநிலை நோனான் புண்கிழித்து முடியினும் அத்துறையாகும். . போரிடை நிலத்திலே பட்டுவீழ்ந்த காஞ்சி மறவன், பகைவருடைய மாறுபாட்டிற்குப் பொறானாகத் தன் மார்பிற் பட்ட புண்ணைத் தானே கிழித்துக் கொண்டு தன் உயிரினை விடின், அதுவும் மறக்காஞ்சித் துறை ஆகும். .. மாறுநிலைகளத்தே பகைவர் முன்னேறி வருகின்ற தனக்கு மாறுபாடானநிலைமை..அப்போது, மானவே மிகத்தன் உயிரைத் தானே போக்கிக் கொள்ளுதலால், இது மறக் காஞ்சி ஆயிற்று. நகையமர் ஆயம் நடுங்க நடுங்கான் - - தொகையமர் ஒட்டிய துப்பிற்-பகைவர்முன் நுங்கிச் சினவுதல் நோனான் நுதிவேலாற் பொங்கிப் பரிந்திட்டான் புண். 75 மகிழ்ச்சிமேவும் தன்னுடைய கூட்டத்தினர் நடுங்கிக் குலையவும், தான் குலையானாய்ச், செறிந்த போரினை ஒட்டிய வலியினையுடைய பகைவர், தன்முன் அமைந்த எல்லையைக் கைப்பற்றிக் கொண்டு தன்பாற் சினந்து வருதலைப் பொறாதவனுமாய், ஒரு காஞ்சி மறவன், வெகுண்டு தன்னுடைய . வ்ேலின் முனையினாலே தன் மார்பிற் புண்ணைப் பிளந்து தன் உயிரினை விட்டான். . பண்புற வரூஉம் பகுதிநோக்கிப்புண்கிழித்து முடியும் மறம்' எனத் தொல்காப்பியப் புறத்திணையியல் (கு 24) இதனை உரைக்கும். நகையமர் ஆயம்-நகைத்தலை மேவிய தானையர்; நகைத்தல் அவர் புறமுதுகிட்டு ஒடுதலால் வந்துறும் பிறர் நகையாகிய இழிவு.புறமுதுகிட்டான் என்ற பழியொடுபுண்தீர்ந்து ●