பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ou acessa a ortou... __* தொகுத்து உரைத்தல் எயில் காத்தலாகிய போரொழுக்கமாக நிகழுவது நொச்சி. இது, நொச்சியார் புறங்கொடாது களத்திற் பட்டதாகிய மறனுடைப் பாசியும்; அவர் ஊர்ப்புறத்து உழிஞையாரொடு போரிட்டதாகிய ஊர்ச்செருவும், அச்செருவிடையே வீழ்தலாகிய செருவிடை வீழ்தலும்; நொச்சியாரது குதிரைகளின் மறப்பண்பு கூறலாகிய குதிரைமறமும்; எயிலிடத்தே நிகழும் போர்மாண்பு கூறலாகிய எயிற்போரும்; எயில்காப்போன் தன்னை அழித்தும் எயிலைக் காத்து நிற்றலாகிய எயில்தனையழித்தலும் அழிபடை தாங்கி அரண்காத்தலாகிய அழிபடை தாங்கலும் நொச்சியான் உழிஞையானுக்குத்தன் மகளைத் தருதற்குமறுத்து உரைத்தலாகிய மகண் மறுத்து மொழிதலும் ஆகிய, எண்வகைத் துறைகளொடும் பொருந்த நிகழுவதாம். o - - ಛಿಛಿಛಿ ।