பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

                 ஆய்வுரை                  13

தன்னொடு புணர்த்தல் (32) வருதார் தாங்கல் (பிள்ளை நிலை (28) வாள் வாய்த்துக் கவிழ்தல் (பிள்ளை நிலை) (27) வாண் மலைந்தெழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடவற்கருளிய பிள்ளையாட்டு (30).

 மேலே கண்ட தொல்காப்பியத்துறைகளுக்கிணையான புறப் பொருள் வெண்பாமாலைத் துறைகள் பு.வெ. மாலையிற் காணப் பெறும் வரிசை.
  கரந்தை (22) போர்மலைதல் (25) போர்க்களத்தொழிதல் (27) ஆளெறி பிள்ளை (28) பிள்ளையாட்டு (30) நெடுமொழி கூறல் (32) வேத்தியன் மலிவு (34).
 தொல்காப்பியர் கூறுகின்ற துறைகளை ஒரே திணையிலேயே புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் சொன்னாலும் சொல்கின்ற பொழுது அத்துறைகளைச் சொல்கின்ற வரிசையில் இரண்டு நூற்களுக்கிடையேயும் வேறுபாடு உள்ளது. இதுபோன்று வேறு திணைகளிலும் காணலாம். அதளை [இணைப்பு 2 (அ) (ஆ)!விற் காணலாம்.
  சில இடங்களில் வரிசை மாற்றத்திற்குக் காரணம் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் புதியதாகச் சில துறைகளையமைத்துக் கொண்டதாகும். [இணைப்பு 3 (அ)] வைம் பார்த்தால் வெட்சித் திணையில் வெண்பா 20 க்குப் பின்னர் 334 இடம்பெற்றுள்ளது. அத்திணைப் பின்னர் உள்ள வெண்பாவிற்குரிய துறையாகிய 'வெறியாட்டு' என்ற துறையினைத் தொல்காப்பியர் வெட்சியில் கொண்டிருக்க ஐயனாரிதனார் பெருந்திணையிற் சேர்த்துள்ளார். 334க்குப் பின்னர் 240 முதல் 243 வரையுள்ள வெண்பாக்களுக்குரிய போந்தை, வேம்பு, ஆர் முதலிய துறைகளைப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் பொதுவியல் திணையிற் சேர்த்துள்ளார். அதனால் பின்னுள்ள வெண்பாக்கள் வெட்சித்திணைத் துறைகளுக்கு எடுத்துக்காட்டுகளாய் வந்துள்ளன.
  புறப்பொருள் வெண்பாமாலை வெண்பாக்களை இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தத்தம் உரைகளில் எடுத்து காட்டுக்களாகத் தரும்பொழுது சில வெண்பாக்கள் அம்மாலையில் எத்திணை துறைகளுக்குரியனவாக உள்ளவோ அத்திணை துறைகளுக்குரிய எடுத்துக்