பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 புறப்பொருள்வெண்பாமாலை நானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்கள் வாழ்ந்த காலம் வேறு அந்நூலிலுள்ள பாக்களையெல்லாம் 'புறநானூறு' என்ற ஒரு நூலாகத் தொகுத்த காலம் வேறு. இப்பாடல்கள் ஒவ்வொன்றின் கீழும் அவ் வப் பாடலிற் குரியதாகக் கருதப்பட்ட திணை, துறைகளை எழுதிய காலம் அந்நூல் தொகுக்கப்பட்ட காலமா அன்றி வேறு காலமா என்று சொல்ல இயலவில்லை. இந்நூலின் முதல் 266 செய்யுள்களுக்கே உரையுள்ளது. உரையில்லாத எஞ்சிய பாடங்களுக்கும் திணை, துறை வகுக்கப்பெற்றுள்ளதால் உரையாசிரியர் காலத்திற்கு முன்னரே திணைதுறைகள் வகுக்கப் பெற்றுள்ளன என்று கூறலாம். புறப்பாடல்களுக்குத் திணை துறை வகுத்தது தொல்காப்பியத் திற் கூறப்பெற்ற இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டதா என்று பார்க்கலாம். புறநானூற்றுத் திணைகளில் 'கரந்தை' 'நொச்சி 'பொதுவியல்' என்ற திணைகள் இடம்பெற்றுள்ளன (இணைப்பு5 அ[ தொல்காப்பியத்தில் இத்திணைகள் பேசப்பெறவில் ை. இது ஒன்று கொண்டே புறநாநூற்றுப் பாடல்களுக்குத் திணை துறையமைத் தவர்கள் தொல்காப்பியப் புறத்திணையியலை மனதிற் கொள்ளவில்லை என்று சொல்லிவிடலாம். மேலும் தொல்காப்பிய நச்சினார்க்கினியர் உரைப்பகுதி ஒன்று இதனை வலியுறுத்தும், அப்பகுதி வருமாறு:- தத்தம், புது நூல் வழிகளால் புறநானூற்றிற்குத் துறை கூறினா ரேனும் அகத்தியமும் தொல்காப்பியமும் தொகை நூல்களுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறைகள் கூற வேண்டும்.(தொல் புறத் சூத் 35 நச் உரை). புறப்பெருள் வெண்பாமாலையினை அடியொற்றியப் புறநா னூற்றுபாக்களுக்குத் திணை, துறை வகுக்கப் பெற்றிருக்குமா என் பது அடுத்த வினா [இணைப்பு 5 (அ) வைப்பார்த்தால் புறநானூற்றில் வரும் துறைகள் அதே பெயரோடு புறப்பொருள் வெண்பாமாலை யிலும் இருப்பதனைக் காணலாம், அச்சேர்க்கையில் உள்ள துறை கள் சிறிதும் பெயர் வேறுபாடின்றி இரண்டிலும் காணப்பெறு கின்றன. ஆனால் [இணைப்பு 5 (இ), (ஈ)] யில் உள்ளவை புறநா னூற்றில் உள்ள துறைகள் திணையிலோ, துறையிலோ, இரண்டி லுமோ பெயர் வேறுபாட்டுடன் புறப்பொருள் வெண்பாமாலையில் காணப்பெறுகின்றவை. புறப்பொருள் வெண்பாமாலையினையே இலக்கணமாகக் கொண்டு புறநானூற்றிற்குத் திணை துறை