பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் கடவுள் வாழ்த்து 1 நடையூறு சொன்மடந்தை நல்குவது நம்மேல் இடையூறு நீங்குவது மெல்லாம் - புடையூறும் சேனைமுகத் தாளிரியச் சீறுமுகத் தூறுமதத் தானைமுகத் தானை நினைத் தால். 2 கண்ணவனைக் காண்கவிரு காதவனைக் கேட்கவாய்ப் பண்ணவனைப் பாட பதஞ்சூழ்க - எண்ணிறைந்த நெய்யொத்து நின்றானை நீல மிடற்றானையென் கையொத்து நேர்கூப்பு க. சிறப்புப் பாயிரம் மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன் தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் 5 பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன் ஓங்கிய சிறப்பி னுலகமுழு தாண்ட வாங்குவிற் றடக்கை வானவர் மருமான்