பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1. வெட்சிப்படலம் வ-று. கொடுவரி கூடிக் குழூஉக் கொண்டனைத்தால் நெடுவரை நீள்வேய் நாலும்-நடுவூர்க் கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற நிணநிரை வேலார் நிலை. 9 இ-ள், புலிகள் தம்மில் இணையொத்துத் திரட்சிகொண்ட தன்மைத்து; உயரிய மலையிடத்து நீண்ட மூங்கில் ஒலிக்கும் ஊரின் நடுத் திரண்ட பசுவினைக் கைப்பற்றி அவ்விடத்து நின்று நீங்கரராய் நிணத்தைக் கோத்த வேலினையுடையார் நின்ற நிலை எ-று. ஆல் அசை. 10.பூசன்மாற்று கணம்பிறங்கக் கைககொண்டார் பிணம்பிறங்கப் பெயர்த்திட்டன்று. (9) இ-ள். நிரைத்திரட்சி பெருக்கக் கைப்பற்றின கரந்தையார் தம் பிணம் பெருக்க வெட்சியார் கெடுத்தது எ-று. வ-று. சூழ்ந்த நிரைபெயரச் சுற்றித் தலைக்கொண்டார் வீழ்ந்தனர் வீழந்தார் விடக்குணியத்- தாழ்ந்த குலவுக் கொடுஞ்சிலைக்கைக் கூற்றனையா செய்த புலவுக் கணைவழிப்போய்ப் புள் இ-ள். வெட்சியார் வளைந்துகொண்ட இரை மீளச் சூழ்ந்து கிட்டின கரந்தையார் பட்டு வீழ்ந்தார்; வீழ்ந்தவருடைய தசையைத் தின்ன வேண்டிப் படிந்தன, வளைந்த கொடிய வில்லாற் சிறந்த கையினையுடைய கூற்றத்தை ஒப்பார் எய்த புலால் நாறும் அம்பு போன வழியே போய்ப் பறவைகள் எ-று. 11.சுரத்துய்த்தல் அருஞ்சுரத்து மகன்கானத்தும் வருந்தாம னிரையுய்த்தன்று (10)