பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் என்-னின், காஞ்சித்திணையும் துறையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள். காஞ்சி, காஞ்தியதிர்வு, தழிஞ்சி, படைவழக்கு. பெருங் காஞ்சி, வாள்செலவு, குடைச்செலவு, ஈஞ்சினக்காஞ்சி, பூக்கோள் நிலை தபைக்காஞ்சி, தலைமாராயம், தலையொடுமுடிதல், மறக்காஞ்சி,பேய்நிலை, பேய்க்காஞ்சி, தொட்டகாஞ்சி, மன்னைக் காஞ்சி, கட்காஞ்சி, ஆஞ்சிக்காஞ்சி, மகட்பாற்காஞ்சி, முகைடி முன்னிருப்பு என இவை இருபத்திரண்டும் காஞர்தானையும் துறையுமாம் எ-று. 61. காஞ்சி வெஞ்சின மாற்றான் விடுதர வேந்தன் காஞ்சி சூடிக் கடிமனை கருதின்று. இ-ன். வெவ்விய சினத்தையுடைய வேற்றுமன்னன் வந்து விட அரசன் காஞ்சி என்னும் பூவை மலைந்து காவலிடத்தைக் காக்க நினைத்தது எ-று. வ -று. அருவரை பாய்ந்திறுது மென்பார்பண் டின்றிப் பெருவரைச் சீறூர் கருதிச் - செருவெய்யோன காஞ்சி மலையைக் கடைக்கணித்து நிற்பதோ தோஞ்செய் மறவர் தொழில் இ.ன், செருமுனையிற்படப் பொருவார் இல்லாதபடியாலே முன்பு ஏறுதற்கு அரிய மலையேறி விழுந்தானும் சாவேய் என்னும் வீரர், இக்காலம் இப்பெரிய மலையிடத்து சீறூரைக் காப்பான் வேண்டி நினைந்து பூசல் விருப்பத்தை யுடையோன் காஞ்சிப் பூவைச் சூட அணியீட்டு நிற்கு மதுவோ, குற்றத்தைப்பண்ணும் வீரர் வினை? எ-று. ஓகாரம் : எதிர்மறை.