________________
58 யுறப்பொருள் வெண்பாமாலை 84. மகட்பாற் காஞ்சி ஏந்திழையாட் டருகென்னும் வேந்தனொடு வேறுநின்றன்று. இ-ள். அழகிய ஆபரணத்தினைஉடையாளை எனக்குத் தருக என்று சொல்லும் அரசனோடு மாறுபட்டு நின்றது எ - று. வ -று. அளிய கழல் வேந்த ரம்மா வரிவை எளியளென் றெள்ளி யுரைப்பிற் - குளியாவோ பண்போற் கிளவியிப் பல்வளையாள் வாண்முகத்த கண்போற் பகழி கடிது. இ-அ. அனியினைஉடையகழன் மன்னர் அழகிய திருவை அனைய மடவாள் தாம் கொள்கைக்கு எளியன் என்று இகழ்ந்துபேசின் தையாவோ? பண்ணையொத்த வார்த்தையினைஉடைய இப்பலதொடி யினை உடையவர் ஒளியினையுடைய வதனத்தவாகிய கண்போன்ற அம்பு, கடியதாக எ-று. 85. முனைகடி முன்னிருப்பு மன்னர் யாரையு மறங்காற்றி முன்னிருந்த முனைகடிந்தன்று. (24) இ-ள். வேந்தர் எல்லாரையும் சிளத்தைக் சாலப் பண்ணி அவரை முன்னேயிருந்த பூசற்களரியினின்றும் போக்கியது ஈ -று. வறு. கடிகமழ் வேரிக் கடைதோறுஞ் செல்லக் கொடிமலி கொல்களி றேவித் - துடிமகிழ ஆர்த்திட் டமரு ளடையாரை யம்முனையிற் பேர்த்திட்டான் பெய்கழலி னான். மிகநாறும் மதுவினை உடைய மாற்றர் அரணத்தின் வாயிலிடந்தோறும் போக வெற்றிக்கொடியால் மிக்க யானைகளை ஏவித் துடிகொட்ட ஆரவாரித்துப் பொருட் பகைவரைச் செருப்புலத் தினின்றும் போகத் துந்தான், இட்டவீரக்கழலினை உடையான் காஞ்சித்திணைப்பாட்டு ஒன்றும் துறைப்பாட்டு இருபத்து நாள் கும் முடிந்தன. நான்காவது காஞ்சிப்படலம் முற்றிற்று. (25)