பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 புறப்பொருள் வெண்பாமாலை இ-ள். ஆடும் பாம்பை அணிந்தாள் நெருப்பு நுகரக் கோபித்த திரிபுரத்தைக் காக்கும் அவுணர்திரளைபொப்ய மலைந்தார், மேலே திங்கள் ஊரும் உயர்ந்த புரிசையைக் காவல்செய்வான் வேண்டி நொச்சிப் பூவை, நுனையால் சிறந்த வேலினையுடையவர் எ - று, - வேலவர் நொச்சி குடினார் என்க, 87. மறனுடைப் பாசி மறப்படை மறவேந்தர் துறக்கத்துச் செலவுரைத்தன்று (1) இல், சினச்சேளையை உடைய சினமன்னர் வீரசுவர்க்கத் திடத்துப்போன போக்கைச் சொல்லியது எ - று. வ-று. பாயினார் மாயும் வகையாற் பலகாப்பும் ஏயினா ரேய விகன்மறவர் - ஆயினார் ஒன்றி யவரற வூர்ப்புலத்துத் தார்தாங்கி வென்றி யமரர் விருந்து. இ - ள். அரணைச் சூழப் பரந்தார் படுமுறையாற் பலகாவலை யும் ஏவினார்; ஏவின மாறுபாட்டையுடைய வீரர் ஆயினார், எதிர தாகக் கிட்டினவர் கெட ஊரிடத்துத் தூசிப்படையைத் தடுத்து வெற்றியினை உடைய தேவர்கட்கு விருந்து எ - று. விருந்து ஆயினார் என்க. 88. ஊர்ச்செரு அருமிளையொடு கிடங்கழியாமைச் செருமலைந்த சிறப்புரைத்தன்று. (2) இ- ன். பகைவரால் புகுதற்குஅரிய காவாற்காட்டோடு அகழி சிதையாதபடி பூசல்செய்த மதிப்பினைச் சொல்லியது எறு